அரிசி மாவு வைத்து சுவையான சப்பாத்தி.., இலகுவாக செய்வது எப்படி?
இந்த அரிசி மாவு சப்பாத்தி அனைத்து விதமான சைட்டிஷ்க்கும் தொட்டு சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான அரிசி மாவு சப்பாத்தி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவயான பொருட்கள்
- சீரகம்- ½ ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய்- 1
- கறிவேப்பிலை- 5 இலை
- தண்ணீர்- 1½ கப்
- உப்பு- ½ ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
பின் இதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் உப்பு சேர்த்து கலந்து பின் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொல்லவும்.
தண்ணீர் வற்றி கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து மாவை ஒரு பத்திரத்தில் மாற்றி சூடாறியதும் மென்மையாக பிணைந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து பிணைந்த மாவை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் சுவையான அரிசிமாவு சப்பாத்தி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |