புலம்பெயர்ந்தோர் குடியிருப்புகளைக் குறிவைத்து பட்டியல் வெளியிட்டக் கலவரக்காரர்கள்
புலம்பெயர்ந்தோர் குடியிருப்புகளைக் குறிவைக்கும் பட்டியல் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பெல்ஃபாஸ்டில் இரண்டாவது இரவாக வன்முறை வெடித்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் வீடுகள்
வடக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள சாண்டி நோவ் சுற்றுச்சாலையில், கலவரத் தடுப்புப் பொலிஸார் மீது முகமூடி அணிந்த குழு ஒன்று செங்கற்கள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை வீசியுள்ளனர்.

மாலை 7.45 மணியளவில், முகமூடி அணிந்திருந்த கலவரக்காரர்கள் பலர் காவல்துறை தடுப்புகளை நோக்கி முன்னேறத் தொடங்கியபோது, பிரச்சனை வெடித்தது.
ஆண்ட்ரிம் சாலை முழுவதும் அணிவகுத்து நின்றிருந்த வடக்கு அயர்லாந்து காவல் சேவையின் (PSNI) கவச வாகனத்தின் மீது வீசுவதற்காக, மரத்தாலான வேலி தகர்க்கப்பட்டு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
வடக்கு பெல்ஃபாஸ்டில் திங்கள்கிழமை இரவு ஸ்டீபன் ஓகில்வி என்பவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்த நிலையில், இன்று இரவு சுமார் 8.15 மணியளவில் முதன்முறையாகக் காவல்துறையின் water cannon பயன்படுத்தப்பட்டது.
அப்பகுதியில் வெடிச்சத்தங்களும் கேட்டன; அருகில் ஒரு தண்ணீர் லொரிக்கும் தீ வைக்கப்பட்டது. பெல்ஃபாஸ்டில் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் வீடுகள் எனக் கூறப்படும் முகவரிகளின் கொலைப் பட்டியல் ஒன்று சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டு வந்தது.
இதற்குப் பதிலடியாக, அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஆதரவாக உள்ளூர்வாசிகள் ஒன்று திரள வேண்டும் என்ற அழைப்புகளும் விடுக்கப்பட்டன.
இதனிடையே, தெற்கு பெல்ஃபாஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் Kate Nicholl இந்தக் கொலைப் பட்டியல் தொடர்பில் பொலிசாருடன் விவாதித்ததாகவும், அனைத்து இன மக்களும் தற்போது ஒருவிதமான பதற்றமான சூழலை உணர்ந்து வருகிறீர்கள்; எனவே, உங்கள் அண்டை வீட்டாருடன் நலம் விசாரித்து, பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை ஹெலிகொப்டர் ஒன்று மேலே வட்டமிட்டு கீழே உள்ள கூட்டத்தைக் கண்காணித்து அவர்களை மெல்லப் பின்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கையில், அதிகாரிகள் தற்போது சாலையைச் சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடைகள் முன்கூட்டியே மூடப்பட்டு, பாதுகாப்புக்காகப் பலப்படுத்தப்பட்டன; சில கடைகள் தங்கள் பாதுகாப்பிற்காகப் பலகைகளால் அடைக்கப்பட்டன. ரயில்கள் மற்றும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன; சில பள்ளிகள் மூடியிருக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால்
திங்கள்கிழமை இரவு நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, சூடானைச் சேர்ந்த புகலிடக் கோருபவர் ஒருவர் மீது கொலை முயற்சிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறு குழுக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

40 வயது கடந்த ஸ்டீபன் ஓகில்வியை கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 30 வயதான ஹாடி அலோடிட் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அந்தத் தாக்குதலில் ஸ்டீபன் ஓகில்வி தனது இடது கண்ணை இழந்ததோடு, ஆழமான வெட்டுக் காயங்களுக்கும் ஆளானார். நேற்றிரவு வெள்ளையர் அல்லாத குடியிருப்பாளர்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது; இதில் பல குடும்பங்களின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால் அவர்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பெல்ஃபாஸ்டில் 20 ஆண்டுகளாக வசித்து வரும் ஓர் ஆப்பிரிக்கக் குடும்பமும் தாக்குதலுக்கு இலக்கானவர்களில் அடங்கும்; அதேவேளையில், உக்ரேனியப் பெண் ஒருவரின் வீட்டின் முன் கதவு தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் கண்டிக்கப்பட்டுள்ள இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, இதுவரை 39 மற்றும் 42 வயதுடைய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, வெஸ்ட்மின்ஸ்டரில், பாதுகாப்புத் துறை அமைச்சர் டான் ஜார்விஸ் தெரிவிக்கையில், இனச் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றன என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |