பிரித்தானியா மகாராணி ஆன்மா சாந்தியடையட்டும்! ட்விட்டரில் அரச குடும்பத்திற்கு குவிந்த போலி இரங்கலால் சர்ச்சை
பிரித்தானியா மகாராணி ஆன்மா சாந்தியடையட்டும் என்ற ஒரே மாதிரியான போலி இரங்கல் செய்தியை ட்விட்டரில் பலர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீன தலைநகரில் உள்ள Tiananmen சதுக்கம் அமைந்துள்ள 1989-ல் பெரிய போராட்டம் நடைபெற்ற இடமாகும். 4 ஜூன் 1989 அன்று, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் சீன இராணுவத்தால் கலைக்கப்பட்டன.
இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1989 ஆம் ஆண்டு Tiananmen சதுக்கத்தில் நடந்த போராட்டத்தின் நினைவு நாளை நினைவுகூறும் வகையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பிரித்தானயா தூதரகம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மெழுகுவர்த்தி படத்தை வெளியிட்டது.
20 நிமிடங்களில் சீன சமூகவலைதளங்களிலிருந்து குறித்து பதிவு நீக்கப்பட்டது.
மேலும், பிரித்தானியா தூதரகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரித்தானியா மகாராணி ஆன்மா சாந்தியடையட்டும் என்ற ஒரே மாதிரியான போலி இரங்கல் செய்தியை ட்விட்டரில் பலர் ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் பகிர்ந்தனர்.
I hereby pay my most solemn tribute to Her Majesty Elizabeth II, by the Grace of God, of the Kingdom of England and of her other realms and territories Queen, My sincere condolences to the Royal Family. May her soul rest in eternal peace.
— poppy (@LPNfswuNml57AHy) June 5, 2021
பிரித்தானியா மகாராணி குறித்து போலி பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த போலி பதிவை பதிவிட்டது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.