நான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த போது யாரும் நம்பல! இப்போ அவர் எப்படி விளையாடுரார் பாருங்க: எம்.எஸ்.கே பிரசாத்
இந்திய தேர்வு குழுவின் தலைவராக இருந்த போது, தான் சந்தித்த விமர்சனத்திற்கு எம்.எஸ்.கே.பிரசாத் இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.
டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் இல்லாமல் இந்திய அணி திணறிக் கொண்டிருந்தது. அப்போது இந்திய அணிக்கு ரிஷப் பாண்ட் தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும், ரிஷப் பாண்ட் அறிமுகமான சமயத்தில் அவருடைய அலட்சியமான கீப்பிங் செயல்பாடும், பொறுப்பற்ற பேட்டிங் தன்மையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியது.
அவரை இந்திய அணியில் சேர்கக்கூடாது என்று பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் கூறிவந்தனர். ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி, அப்போது விமர்ச்சனத்திற்கு இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த எம்.எஸ்.கே பிரசாத் ஆளாகினார்.
இப்போது ரிஷப் பாண்ட் இல்லாத டெஸ்ட் அணியை நினைத்து கூட பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. இது குறித்து எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில், ரிஷப் பாண்ட் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று யாரும் அப்போது நம்பவில்லை. அவரால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாது என்றும், அவரால் இந்திய அணிக்கு சிறப்பாக கீப்பிங் செய்ய முடியாது என்றும் சராமாரியான விமர்ச்சனங்களை முன்வைத்தனர்.
ஆனால் இப்போது நடந்தது என்ன? ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்ட அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார்.
இந்திய அணியின் எதிர்கால நலன் கருதி ஒரு தேர்வுக் குழு தலைவராக எப்படி செயல்பட வேண்டுமோ எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டுமோ அதைத்தான் நானும் செய்தேன். இளம் வீரர்களை உருவாக்குவது ஒவ்வொரு அணிக்கும் முக்கியம் என்பதால் அது போன்ற ஒரு முடிவை நான் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.