டோனி எனக்கு கடவுள் போன்றவர் என கூறும் இந்திய அணி வீரர்! அவர் யார் தெரியுமா?
டோனியை கடவுளாக பார்க்கும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் குறித்து இளம் வீரர் நிதிஷ் ராணா பேசியுள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு முக்கிய இடம் உண்டு.
கேப்டனாக இவரின் ஆளுமையையும், களத்தில் கூலாக இருந்து சாதிக்கும் இவரின் திறமையையும் பார்த்து இவருக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் கிரிக்கெட் அணிகளில் விளையாடும் சில வீரர்கள் இவரை ஒரு முன்னுதாரணமாகவும் கருதி வருகின்றனர்.
இந்நிலையில் இளம் வீரர் நிதிஷ் ராணா அளித்த பேட்டியில், ரிஷப் பண்ட் டோனியை மிகவும் வியந்து பார்க்கிறார். அதுமட்டுமின்றி தூங்கி எழும் போது தான் பார்க்க விரும்பும் நபராக டோனி இருக்க வேண்டும் என அவர் விரும்புவார்.
இதைப் பற்றி என்னிடமே பலமுறை அவர் கூறியிருக்கிறார்.
மேலும், டோனியுடன் ஒப்பிடுவது தவறு என்றும் தான் அதற்கு தகுதியானவர் இல்லை என்றும் பல முறை சொல்லி இருக்கிறார். அதோடு டோனி தனக்கு கடவுள் போன்றவர் எனவும் பண்ட் என்னிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்.