சிக்ஸர் அடித்து சதம் விளாசிய ரிஷாப் பண்ட்! மற்றொரு தோனியின் சாதனையும் நொறுங்கியது
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி வீரர் ரிஷாப் பண்ட் 7வது சதத்தை பதிவு செய்தார்.
7வது டெஸ்ட் சதம்
லீட்ஸில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
சுப்மன் கில், ரிஷாப் பண்ட் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 400 ஓட்டங்களை கடந்தது.
ரிஷாப் பண்ட் 145வது பந்தில் இறங்கி வந்து சிக்ஸர் விளாசி சதம் அடித்தார். இது அவரது 7வது டெஸ்ட் சதமாகும்.
சாதனை
இதன்மூலம் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் எம்.எஸ்.தோனி 6 சதங்களும், விருத்திமன் சஹா 3 சதங்களும் அடித்திருந்தனர். தற்போது வரை இந்திய அணி 100 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 426 ஓட்டங்கள் குவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |