அந்த இந்திய அணி வீரரை கன்னத்தில் அறைவேன்: உலகக் கோப்பையை வென்ற ஜாம்பவான் பேச்சு
ரிஷப் பண்ட்டை கன்னத்தில் அறைவேன் என்று ஜாம்பவான் கபில் தேவ் பேசியுள்ளார்.
ரிஷப் பண்ட்
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்தவர் ரிஷப் பண்ட். கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் தற்போது மும்பையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில்இந்தியா – அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்து கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில், ரிஷப் பந்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது பேரன்பு வைத்துள்ளேன்.
கன்னத்தில் அறைவேன்
அவர் விரைவில் குணம் அடைந்து மைதானத்திற்கு திரும்ப வேண்டும். அந்த நேரத்தில் அவரது கன்னத்தில் பலமாக அறைவேன். ஏனென்றால் அவர் தன்னுடைய நலனை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.
அவருக்கு ஏற்பட்ட காயத்தால் இந்திய அணி இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை என கூறியுள்ளார்.