யூரோ கால்பந்து இங்கிலாந்து போட்டிக்கு நேரில் சென்றதால் வந்த வினை! இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு கொரோனா
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர் ரிஷப் பண்டிற்கு கொரோனா உறுதியான நிலையில் அவருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் ஒரு வீரருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது, அது யார் என்று அப்போது தெரியாத நிலையில் தற்போது ரிஷப் பண்ட் தான் அந்த வீரர் என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ரிஷப் பண்ட்டிற்கு நோய் அறிகுறிகள் இல்லாமலேயே ஒருவாரத்துக்கு முன்பே கொரோனா பாசிட்டிவ் என்று தெரிய வந்துள்ளது.
வெம்பிலியில் நடைபெற்ற இங்கிலாந்து - ஜேர்மனி இடையே நடைபெற்ற யூரோ 2020 கால்பந்தாட்டத்துக்குச் சென்ற வீரர்களில் ரிஷப்பும் ஒருவர். அவர் தற்போது தெரிந்தவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் உடனடியாக துர்ஹாமில் இந்திய அணியுடன் இணைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இங்கிலாந்தில் பரவி வரும் டெல்டா வேரியண்ட் கொரோனா வைரஸ் ரிஷப்பிற்கு தொற்றியுள்ளதாகத் தெரிகிறது.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களை விம்பிள்டன், யூரோ 2020 கால்பந்து தொடர்களை தவிர்க்குமாறு கூறியிருந்தார்.
ஆனால் ரிஷப் யூரோ கால்பந்து தொடருக்குச் சென்றதால் கொரோனா தொற்றியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.