மக்கள் வறுமையில்... ரிஷிக்கும் அவரது மனைவிக்கும் மன்னரைவிட சொத்து அதிகம்: எதிர்க்கட்சி விமர்சனம்
பிரித்தானியாவில் நாளை பணவீக்கம் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், பிரதமர் ரிஷி மற்றும் அவரது மனைவியின் சொத்து குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பிரித்தானியாவில் பணவீக்கத்தின் நிலை
பிரித்தானியாவில் நாளை பணவீக்கம் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், பணவீக்க விகிதம் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த செய்தி, ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு நல்ல செய்தியாகும். ஏனென்றால், தாங்கள் வாக்குறுதி அளித்ததுபோலவே, தங்கள் ஆட்சியின்போது பணவீக்கம் குறைந்துள்ளதாக அவர்கள் தற்போது மக்களிடம் பிரச்சாரம் செய்யலாம்.
எதிர்க்கட்சியினர் விமர்சனம்
ஆனால், பணவீக்கம் குறைந்துள்ளதாக கூறுவதெல்லாம் சும்மா என்கிறார்கள் லேபர் கட்சியினர். கடந்த மாதத்தில் மட்டும் விலைவாசி மோசமடைந்ததாக பிரித்தானியர்களில் பாதி பேர் நம்புவதாக தரவுகள் தெரிவிக்கின்றன என்கிறது அக்கட்சி.
அத்துடன், ரிஷியின் சொத்து கடந்த ஆண்டில் 122 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு அதிகரித்ததாக தெரிவிக்கும் அக்கட்சி, மக்களோ தொடர்ந்து கஷ்டத்தில் இருப்பதாக கூறுகிறது. ரிஷி வசதியாக இருக்கிறார், ஆகவே, அவருக்கு மக்களுடைய கஷ்டத்தைக் குறித்தெல்லாம் தெரியாது என்கிறார்கள் லேபர் கட்சியினர்.
ரிஷி, அக்ஷதா தம்பதியரின் சொத்து மதிப்பு, 651 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள், மன்னர் சார்லசைவிட அதிக செல்வந்தர்கள் என்கிறது பிரித்தானியாவின் பெரும் பணக்காரர்களின் வருடாந்திர பட்டியல்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |