'பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியே ஆகவேண்டும்' போரிஸ் ஜான்சனிடம் கெஞ்சும் ரிஷி சுனக்!
பிரித்தானியாவில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என நீக்குமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனை வலியுறுத்தி, நிதி அமைச்சர் ரிஷி சுனக் கடிதம் எழுதியுள்ளார்.
பிரித்தானியா மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாககவும், அவர்களின் விடுமுறை நாட்களை வீணடிக்காமல் காப்பாற்ரம் விதமாக நிதி அமைச்சர் ரிஷி சுனக் இவ்வாறு வலியுறுத்திவருகிறார்.
பெரும்பாலான பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு, மிகவும் பிடித்த சுற்றுலா தலமாக பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது இந்த மூன்று நாடுகளும் பிரித்தானியாவின் 'மஞ்சள் நிற பட்டியலில்' (Amber List) உள்ளன.
ரிஷி சுனக் எழுதிய கடிதத்தில், பிரித்தானியாவின் சர்வதேச எல்லை கட்டுப்பாடுகள், நாட்டின் பொருளாதாரத்தையும், சுற்றுலாவையும் மிகவும் பாதிப்பதாக கூறியுள்ளார். இதனால், ஆயிரக்கணக்கானோரின் பணிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், பிரித்தானிய அரசின் ஆக்கப்பூர்வமான தடுப்பூசி திட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளாமல், பயணிகளுக்கு சோகத்தை அளிக்கும் கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு இருக்கிறோம் என கூறியுள்ளார்.
இந்நிலையில், வரும் வாரத்திற்குள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியாகவேண்டும் என ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ஒரு முடிவை எடுப்பார் என நம்பப்படுகிறது.