இந்திய கோடீஸ்வரரின் மகளை மணந்த ரிஷி சுனக்! கல்லூரியில் இடம் மாறிய இதயம்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் வருவாரா மாட்டாரா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அரசியல்வாதி ரிஷி சுனக் பற்றி அதிகம் கேள்விபட்டிருப்போம்!
சரி அவரது காதல் வாழ்க்கை குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்திய வம்சாவளியான ரிஷி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்க வந்தார் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மக்ள் அக்ஷதா மூர்த்தி. அங்கு தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
shethepeople
அடுத்த நான்கு ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களும் கலந்து கொண்டனர், இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு முன்னர் நாராயண மூர்த்தி ஒரு முறை தன் மகளிடம் இப்படி சொன்னார். நான் ரிஷியைச் சந்தித்தபோது நீ அவரை புத்திசாலித்தனமானவர், அழகானவர், முக்கியமாக நேர்மையானவர் என கூறியதை அப்படியே உண்மை என உணர்ந்தேன்.
எதற்காக உன் இதயத்தை அவர் திருடுவதற்கு நீ அனுமதித்தாய் என்பதை புரிந்து கொண்டேன் என கூறியிருந்தார்.
dailystar.co.uk