ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கலவரம்! மோடிக்கு தொடர்பு உள்ளது என்பது பிரித்தானியாவுக்கு தெரியுமா? ரிஷி சுனக் அளித்த பதில்
குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்பட சர்ச்சையில் இந்திய பிரதமர் மோடிக்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தார்.
குஜராத் கலவரம்
இந்திய மாநிலம் குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
இந்த நிலையில் லண்டன் பிபிசி நிறுவனம் 'India: The Modi Question' என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படத்தின் முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது.
அதில் குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது பிரித்தானிய அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
PTI
இதனால் இந்த ஆவணப்படத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எம்.பி இம்ரான் உசைன் கேள்வி எழுப்பினார்.
அவர், 'பிபிசி ஆவணப்படத்தில் மோடி குறித்து கூறப்பட்ட தகவல்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?' என்று கேட்டார்.
File Photo
ரிஷி சுனக் பதில்
அதற்கு பதிலளித்த பிரதமர் ரிஷி சுனக், 'பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் நீண்ட காலமாக உள்ளது, அது மாறவில்லை. நிச்சயமாக நாங்கள் மக்கள் எங்கும் துன்புறுத்தப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டோம்.
ஆனால் ஜென்டில்மேன் மீது முன்வைத்த குணாதிசயத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன் என்று எனக்கு தெரியவில்லை' என பதிலளித்தார். இந்த ஆவணப்படத்தின் இரண்டாம் பகுதி வரும் 23ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
@ Getty Images