பிரதமர் பொறுப்புக்கு வந்தே சில நாட்கள்... பெருந்தொகை நன்கொடை விவகாரத்தில் சிக்கிய ரிஷி சுனக்
COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் ரிஷி சுனக் தவிர்ப்பதாக குற்றச்சாட்டு
பிரதமர் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் கொள்ளை லாபத்தைப் பாதுகாக்க முயன்று வருகிறார்.
பிரதமர் கனவு நிறைவேறும் பொருட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதரவாளர்கள் குழுக்களிடம் இருந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பெருந்தொகை நன்கொடை பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பொருட்டே, எகிப்தில் முன்னெடுக்கப்படும் COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் ரிஷி சுனக் தவிர்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
@PA
இந்த நிலையில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சுனக்கின் அர்ப்பணிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பட்டுள்ளது. ரிஷி சுனக் பொதுவாக பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் சார்பானவர் என குற்றஞ்சாட்டியுள்ள தொழிலாளர் கட்சியின் Ed Miliband,
அவர் பிரித்தானிய மக்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று கனவு காணவேண்டாம் என சாடியுள்ளார். மேலும், பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும் நமது பிரதமர் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் கொள்ளை லாபத்தைப் பாதுகாக்கவே முயன்று வருகிறார்.
நாம் எதிர்கொள்ளும் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் காலநிலை நெருக்கடிகளை ஒருபோதும் அவரால் சமாளிக்க முடியாது எனவும் Ed Miliband குற்றஞ்சாட்டியுள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதரவு நிறுவனங்களில் இருந்து இந்த ஆண்டு மட்டும் ரிஷி சுனக் 141,000 பவுண்டுகள் நன்கொடை பெற்றுள்ளார். இதில் பெரும்பகுதி பிரதமருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிரான பரப்புரைகளில் செலவிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் பொறுப்புக்கு வந்துள்ள ரிஷி சுனக், தாம் மிகவும் அவசர பணிகளை செய்து முடிக்க வேண்டியிருப்பதால் எகிப்தில் COP27 உச்சி மாநாட்டில் பங்கேற்க முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.
உண்மையில் அடுத்த மாதம் முன்னெடுக்கவிருக்கும் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.