இனி பிரித்தானியா செல்வது இந்தியர்களுக்கு சிக்கல்! Visa தொடர்பில் அதிர்ச்சி கொடுத்த ரிஷி சுனக்
பிரித்தானியாவில் வேலைக்கு செய்ய விரும்புபவர்களுக்கான விசா கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது.
விசா தொடர்பில் நடவடிக்கை
ரிஷி சுனக் அரசாங்கம் பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க விசா தொடர்பில் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, வேலை செய்ய வருபவர்களுக்கான விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் திறமையானவர்களுக்குகான வேலை விசா 13,380 பவுண்ட் ஆக இருந்தது.
அதன் பின்னர் 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 21,837 ஆக உயர்ந்தது. இதன்மூலம் 63 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
சிறப்பு திறன் பணியாளர் விசா
பிரித்தானிய அரசு தங்கள் நாட்டில் பணிபுரிய தேவைப்படும் சிறப்பு திறன் பணியாளர் விசாவை பெற, ஆண்டு ஊதியமாக ஒவ்வொரு நபரும் 26,200 பவுண்ட் (இந்திய மதிப்பில் 27 லட்சம்) பெற வேண்டும் என முன்னர் கூறியிருந்தது.
ஆனால், தற்போது இந்த ஊதியம் 38,700 பவுண்ட் ஆக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் கிட்டத்தட்ட 50 சதவீத உயர்வை காட்டுகிறது.
இதன் காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது. எனினும் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாதது என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |