பல கோடிகள் பணத்தை சமீபத்தில் பெற்ற ரிஷி சுனக் மனைவி! எங்கிருந்து தெரியுமா?
இன்போஸிஸ் நிறுவனம் மூலம் டிவிடெண்டாக பல கோடிகளை பெற்ற அக்ஷதா மூர்த்தி.
தனது நிறுவனமான இன்போஸில் பெரியளவில் பங்குகளை அவர் வைத்துள்ளார்.
ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு அவர் பங்குதாரராக இருக்கும் இன்போஸிஸ் நிறுவனம் மூலம் டிவிடெண்டாக ரூ. 64.27 கோடிகள் கிடைத்துள்ளது.
இன்போஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸில் 39 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார்.
வியாழன் அன்று ஒரு பங்கிற்கு 16.5 ரூபாய் அரையாண்டு ஈவுத்தொகையை (டிவிடெண்ட்) வழங்க இன்ஃபோசிஸ் எடுத்த முடிவால் அவருக்கு ரூ. 64.27 கோடிகள் கிடைத்துள்ளது.
DAVID M. BENETT/ glamourmagazine
சண்டே டைம்ஸ் வெளியிட்டிருந்த பணக்காரர்கள் பட்டியலின்படி, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதாவின் சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.