ஜோ பைடனை அடுத்து இஸ்ரேல் புறப்படும் பிரித்தானிய பிரதமர்: உலகத் தலைவர்கள் ஒன்றிணையவும் கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அடுத்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் பயணப்பட இருக்கிறார். இரண்டு நாடுகள் முன்னெடுக்கப்படும் இந்த பயணத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி Isaac Herzog ஆகியோர்களை சந்திக்க இருக்கிறார்.
ரிஷி சுனக் முடிவு
குறித்த சந்திப்பில், இரு தரப்பு போர் நெருக்கடியை குறைக்க ஆலோசனைகள் முன்னெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. காஸா பகுதிக்கான போக்குவரத்தை உருவாக்க அழுத்தம் அளிக்கவும், அதனூடாக மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கவும் வாய்ப்பாக அமையும் என ரிஷி சுனக் நம்புவதாக கூறப்படுகிறது.
@getty
மட்டுமின்றி, காஸா பகுதிக்குள் சிக்கியுள்ளவர்களையும் மீட்க இந்த வாய்ப்பை பயன்படுத்த ரிஷி சுனக் முடிவு செய்துள்ளார். மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் பிராந்தியத்தில் உள்ள பல தலைவர்களை சந்திக்கவும் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார்.
ஒவ்வொரு அப்பாவியின் உயிரும் மதிப்புமிக்கது என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதச் செயலைத் தொடர்ந்து பல உயிர்கள் பலியாகியுள்ளன என்றார்.
பணயக்கைதிகளை விடுவிக்க
இதனிடையே, வெளிவிவகார செயலாளர் James Cleverly எகிப்து, துருக்கி மற்றும் கத்தாருக்கு விஜயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் தெரிவிக்கையில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள செல்வாக்குமிக்க நாடுகளின் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும்,
@getty
காஸாவுக்குள் மனிதாபிமான நடவடிக்கைகளை எளிதாக்கவும் பணயக்கைதிகளை விடுவிக்க ஒன்றிணைந்து செயல்படவும் இந்த சந்திப்புகள் உதவும் என்றார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கையில், ரஃபா எல்லைக் கடவைத் திறக்க எகிப்திய தலைவர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி ஒப்புக்கொண்டதாகவும், இதனால் 20 லொறிகள் மனிதாபிமான உதவிகள் காஸா பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |