கொடுத்த வாக்குறுதி எதையும் காப்பாற்றவில்லை... கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் திணறிய ரிஷி
பிரித்தானிய பிரதமர் ரிஷி, ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர், கொடுத்த வாக்குறுதி எதையும் காப்பாற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை ஊடகவியலாளர் முன்வைக்க, அவருக்கு சரியான பதிலளிக்க முடியாமல் திணறும் நிலை ரிஷிக்கு ஏற்பட்டது.
கன்சர்வேட்டிவ் கட்சி நிறைவேற்றாத வாக்குறுதிகள்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவில்லை, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் மருத்துவரை சந்திப்பதற்கான காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவில்லை, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பவில்லை, வீடு பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, ஆக, கன்சர்வேட்டிவ் கட்சியினர் அளித்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லை என பிபிசி தொலைக்காட்சி ஊடகவியலாளரான Nick Robinson என்பவர், பிரதமர் ரிஷி சுனக்கிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளக்கம் கேட்டார்.
பதிலளிக்கத் திணறிய ரிஷி
ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் தடுமாறிய ரிஷி, அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் குறைப்பு மற்றும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் ஆகிய விடயங்களில் தன் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதை ஒப்புக்கொண்ட ரிஷி, ஆனால், தனது ஆட்சிக்காலத்தின்போது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளைக் கொண்டுவந்ததாக தெரிவித்தார்.
ருவாண்டா திட்டம் நிறைவேற்றப்படாததைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில், கடந்த ஆண்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்கு குறைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆக மொத்தத்தில், ஊடகவியலாளர் எழுப்பிய எந்த கேள்விக்குமே ரிஷியால் சரியான பதிலளிக்க இயலவில்லை. அடுத்து வரும் தேர்தலில் அவர் பிரதமர் போட்டியில் நிற்கும் நிலையில், இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |