ஜேர்மனியில் தாறுமாறாக உயர்ந்து வரும் விலைவாசி... உணவு வங்கிகள் முன் வரிசையில் நிற்கும் மக்கள்
ஐரோப்பா முழுவதுமே விலைவாசி கன்னாபின்னாவென உயர்ந்துவரும் நிலையில், ஜேர்மனியில் மக்கள் உணவு வங்கிகள் முன் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் காட்சிகளைக் காணமுடிகிறது.
பல்பொருள் அங்காடிகள் இலவசமாக வழங்கிய மளிகைப் பொருட்கள், விலை மலிவான உணவுப் பொட்டலங்கள் ஆகியவை உணவு வங்கிகளில் மிகக் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் 30 யூரோக்களுக்கு ஒரு ட்ராலி முழுவதுமான உணவை எடுத்துக்கொள்ளலாம்.
உக்ரைன் போரால் ஜேர்மனியில் பணவீக்கம் 7.9 சதவிகிதமாக அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உணவு வங்கிகளின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இப்போதைக்கு சுமார் 1,000 உணவு வங்கிகள் தன்னார்வலர்களால் நடத்தப்படுகின்றன.
பொதுவாக உணவு வங்கிகள் தங்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட உணவுப்பொருட்களை இலவசமாகத்தான் மக்களுக்கு வழங்கும். ஆனால், அந்த உணவு வங்கிகள் இயங்குவதற்கே வாடகை, மின் கட்டணம் போன்ற விடயங்களுக்காக பணத்தேவை இருப்பதால், தற்போது இலவசமாக உணவுப்பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, அவை குறைந்த விலைக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.