மயங்கிய ஊழியரை அலேக்காக தோளில் சுமந்த பெண் இன்ஸ்பெக்டர்! பாராட்டு குவித்து வரும் உயர் அதிகாரிகள்
சாலையோரம் பரிதாபமாக கிடந்த நபரை தோலில் சுமந்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது.
சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றார்.
இவர் இரவு மழையில் நனைந்ததால் வாலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து டி.பி.சத்திரம் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொலிஸ் உடனடியாக விரைந்து வந்தனர்.
மயங்கி கிடந்த உதயகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி எவ்வித தயக்கம் இன்றி தூக்கி தனது தோளில் சுமந்துக்கொண்டு வேகமாக வெளியே வந்து ஆட்டோ ஒன்றை பிடித்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உயிருக்கு போராடும் நேரத்தில் இவர் செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயலை பொலிஸ் உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
K-6 T.P.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த உதயகுமாரை மீட்டு ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.#greaterchennaipolice#chennaipolice#shankarjiwalips#gcprescueteam pic.twitter.com/0iblojZl6J
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) November 11, 2021