கோஹ்லி வெற்றியைப் பறித்துவிட்டார்! முதல் அணியாக வெளியேறியது குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன்

Virat Kohli Indian Cricket Team Pakistan national cricket team Mohammad Rizwan ICC Champions Trophy
By Sivaraj Feb 24, 2025 06:29 AM GMT
Report

நாங்கள் நிறைய தவறு செய்துவிட்டோம் என்று இந்திய அணிக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். 

வெளியேறிய பாகிஸ்தான்

துபாயில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 241 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. சவுத் ஷகீல் 62 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 42.3 ஓவரில் 244 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 56 ஓட்டங்களும் எடுத்தனர். 

Virat Kohli 

ரிஸ்வான் கூறிய காரணம்

தோல்வி காரணமாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் முதல் அணியாக வெளியேறியது. அணித்தலைவர் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) தோல்வி குறித்து பேசுகையில்,

"நாங்கள் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றோம், ஆனால் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த மைதானத்தில் 280 ஓட்டங்கள் நல்ல ஸ்கோர்ன்னு நினைத்தோம். மிடில் ஓவர்களில், அவர்களின் பந்துவீச்சாளர்கள் மிகவும் நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளினார்கள்" என்றார்.

மேலும் அவர், "தவறான, மோசமான ஷாட் தேர்வினால் நானும் சவுத் ஷகீலும் அதை ஆழமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததால் நேரம் எடுத்துக்கொண்டோம். அவர்கள் எங்களை மிகவும் அழுத்தத்தில் தள்ளினர். அதனால்தான் 240 ஓட்டங்களுக்குள் நசுக்கப்பட்டோம். தோற்கும்போதெல்லாம், எல்லா துறைகளிலும் நல்லா விளையாடவில்லை என்று அர்த்தம்.

ஆரம்பத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தினோம், ஆனால் அவர்கள் எங்களை அதிகமாக தாக்கினார்கள். அவர்கள் மிகவும் நன்றாக விளையாடினார்கள். விராட் கோஹ்லியும், ஷுப்மன் கில்லும் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர்.

நாங்கள் ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டும். இந்த போட்டியிலும், கடைசி போட்டியிலும் நிறைய தவறுகள் செய்தோம். அவர்கள் சரி செய்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.  

Mohammad Rizwan 

Shubman Gill/Virat Kohli

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US