துணிவு படம் பார்த்து வங்கியை கொள்ளையடிக்க சென்ற நபர்! பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல்லில் துணிவு உள்ளிட்ட திரைப்படங்களை பார்த்து பட்டப்பகலில் வங்கியில் இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை சம்பவம்
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வழக்கம் போல ஒரு பெண் உட்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, திடீரென வங்கியில் புகுந்த வாலிபர் ஒருவர் ஊழியர்களை கட்டி போட்டார். பின்னர், அவர்கள் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ஊழியர் ஒருவர் அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, வங்கிக்குள் ஓடி வந்த வாடிக்கையாளர்கள் சேர்ந்து அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
விசாரணை
இது தொடர்பாக உடனே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திய போது திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் என்பதும் சினிமாவை பார்த்து தான் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும் அண்மையில் வெளியான துணிவு படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் வாழ்க்கையை வெறுத்து விட்டதாகவும் காவல்துறை விசாரணையில் அவர் கூறியுள்ளார்.