டோனி கேப்டன் ஆன முதல் போட்டியிலே எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்! நெகிழ்ந்து பேசிய பிரபல வீரர்
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நடந்த சுவாரஸ்மான தகவலை ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ஆம் திகதி முதல் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக எடுக்கப்பட்டுள்ள உத்தப்பா, கடந்த 7 போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும், மீதமுள்ள இந்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டோனி கேப்டன்சி குறித்து உத்தப்பா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் குறிப்பாக, தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து அவர் கூறுகையில், அந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர் முடிவில் 141 ஓட்டங்கள் எடுத்திருந்தோம். இதனால் இந்த போட்டி பவுல் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
இந்த பவுல் அவுட் முறையில் சேவாக் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் அடுத்தடுத்து பந்து வீசி ஸ்டெம்ப்புகளை தகர்த்தனர். அதன் பின், மூன்றாவது ஆளாக யாருமே எதிர்பாராதவிதமாக நான் பந்து வீசி ஸ்டம்பை சாய்த்தேன்.
அது தான் மிகவும் முக்கியமான தருணமாக இருந்தது. இந்த போட்டி சமனில் முடிந்த பின்பு, டிரெஸ்ஸிங் ரூமில் பவுல் அவுட் முறை குறித்து விவாதித்தோம். அப்போது நான் டோனியிடம் சென்று நான் பந்து வீசுகிறேன் என்று கூறினேன்.
ஒரு நிமிடம் என்னைப் பார்த்த டோனி, ஓகே என்று சொல்லி சென்றுவிட்டார்.
அதுதான் அவருடைய கேப்டனாக முதல் சர்வதேச போட்டி அந்த போட்டியிலேயே அவர் இளம்வீரரான என்னை நம்பி அந்த வாய்ப்பினை அளித்தார்.
அவருடைய தலைமைப் பண்பை அந்த போட்டியில் நான் பார்த்தேன் என்று பாராட்டி தள்ளியுள்ளார்.