இவர் வந்துட்டாலே பீல்டிங் செட் பண்றது கஷ்டம்! 7 வருட கேப்டன்சிப் குறித்து வெளிப்படையாக பேசிய காம்பீர்
ஐபிஎல் தொடரில் தன்னுடைய 7 ஆண்டு கேப்டன்சிப்பில் நான் பார்த்து பயந்த வீரர் யார் என்பதை முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் ஐபிஎல் தொடரில், சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ் வந்தார். இவர் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தற்போது கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றுள்ள இவர், அவ்வப்போது தன்னுடைய கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிராக எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும் விளையாடும் வீரர்களில் ரோகித்சர்மாவும் ஒருவர். ரோகித் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆடிய போதெல்லாம் நிறைய ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இன்னும் நான் தெளிவாக கூற முடியும் மற்ற பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும்போது நான் பெரியதாக பீல்டிங் வியூகங்களையெல்லாம் அமைப்பதில்லை. ஆனால் ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது நிச்சயம் எனக்கு பீல்டர்களை நிறுத்த பயம் ஏற்படும்.
ஏனெனில், அவரால் ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக விளையாட முடியும். அதே போன்று வேகப்பந்து வீச்சில் சிறப்பாக விளையாட முடியும்.
அதுமட்டுமின்றி, தடுப்பாட்டமும் ஆட முடியும் அதே வேகத்தில் இருமடங்கு அதிரடியான ஆட்டமும் அவரால் ஆட முடியும்.
இதன் காரணமாகவே அவர் விளையாடும் போது ஒருவித பதட்டம் இருக்கும். நிச்சயம் ரோகித் தற்போதைய கிரிக்கெட் உலகில் அட்டாக்கிங் பேட்ஸ்மேன் என்றால் அதை மறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.