ரோகித் என் கையில் கோப்பையை கொடுத்து இந்த வார்த்தையை சொன்னார்! வெங்கடேஷ் அய்யர் ஓபன் டாக்
இந்திய அணியின் இளம் வீரரான வெங்கடேஷ் அய்யர், நியூசிலாந்து டி20 தொடர் வெற்றி கோப்பையை ரோகித் தன்னிடம் கொடுத்த போது, என்ன கூறினார் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 அதன் பின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றியது.
கோஹ்லி இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்பு, ரோகித் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவருடைய முதல் தொடரே வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இந்த தொடரின் போது, வெற்றிக்கான கோப்பையை ரோகித் வாங்கிய பின்பு, அதை அப்படியே இளம் வீரரான வெங்கடேஷ் அய்யரிடம் கொடுத்து அழகு பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், இது குறித்து வெங்கடேஷ் அய்யர் கூறுகையில், இந்த தொடர் முழுவதுமே ரோகித் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி நாங்கள் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய போது வெற்றிக் கொண்டாட்டத்தில் என்னிடம் கோப்பையை கொடுத்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டீர்கள். ஆல் தி பெஸ்ட் என்று கூறியதாக தெரிவித்தார்.
மேலும், தன்னை பொறுத்தவரை இந்த தொடரில் சரியாக என்னுடைய வேலையை செய்துள்ளதாக நினைக்கிறேன்.
இனி வரும் தொடர்களில் இந்திய அணியில் நான் எந்த இடத்தில் களம் இறங்கினாலும், நான் அந்த இடத்தில் விளையாட தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.