காயத்திலிருந்து குணமடைந்த ரோகித்! எப்போது அணிக்கு திரும்புவார்? முக்கிய தகவல்
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலி டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பின் கோலி, டெஸ்ட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், அடுத்து இந்திய அணிக்கான டெஸ்ட் கேப்டன் ரோகித் தான் என்று கூறப்படுகிறது.
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடாமல் உள்ள ரோகித், இந்தியாவின் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
தற்போது காயத்தில் இருந்து ரோகித் குணமடைந்துள்ளதாகவும், அவர் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவு அணி, அங்கு பிப்ரவரி மாதம் முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.