ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக ரோஹித் சர்மா படைத்த சாதனை
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் எந்த இந்தியரும் செய்யாத சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
MI vs GT
2025 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று, முதலில் துப்பட்டம் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து, 228 ஓட்டங்கள் குவித்தது.
229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்களை இழந்து, 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், மும்பை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
ரோஹித் சர்மா சாதனை
இந்த போட்டியில், ரோஹித் சர்மா 50 பந்துகளில், 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 81 ஓட்டங்கள் குவித்து, மும்பை வெற்றிக்கு முக்கிய பந்து வகித்தார்.
இதன் மூலம், ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில், 2 புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில், 4 சிக்ஸர்கள் அடித்தன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்களை கடந்த அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் பட்டியலில், 357 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.
300 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா 2வது இடத்திலும், 291 சிக்ஸர்களுடன் விராட் கோலி 3வது இடத்திலும், 264 சிக்ஸர்களுடன் தோனி 4வது இடத்திலும், 251 சிக்ஸர்களுடன் ஏபி டி வில்லியர்ஸ் 5வது இடத்திலும் உள்ளனர்.
மேலும், இந்த போட்டியில், 81 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், 271 போட்டிகளில் விளையாடி, ஐபிஎல் தொடரில் 7000 ஓட்டங்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விராட் கோலி, 266 போட்டிகளில் விளையாடி, 8618 ஓட்டங்களை குவித்து ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |