மைதானத்திற்கு புகுந்து திடீரென்று ரோகித்சர்மா காலில் விழுந்து வணங்கிய ரசிகர்! வைரலாகும் புகைப்படங்கள்
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், ரோகித்சர்மாவின் ரசிகர் ஒருவர் அவருடைய காலில் விழுந்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இதையடுத்து இரண்டாவது டி20 போட்டி இன்று ஜார்கண்டில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி சற்று முன் வரை 3.1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர், ரோகித் இருந்த இடத்திற்கு சென்று, அவருடைய காலில் விழுந்து வணங்கினார். உடனே ரோகித் அவரை எழுப்பினார்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.