ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல்! தோல்விக்கு காரணம் இவர்கள் தான்: கேப்டன் ஓபன் டாக்
மும்பை இந்தியன்ஸ் கேப்டம் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியிடம் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
2021 ஐபிஎல் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
ஏப்ரல் 20 அன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ரோகிர் சர்மாவுக்கு அபராதம் வதிக்கப்பட்டுள்ளது என ஐபிஎல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெதுவாக பந்து வீசியது தொடர்பான ஐபிஎல்-ன் நடத்தை விதிமுறைகளின் கீழ் இந்த சீசனில் அவரது அணியின் முதல் குற்றமாக இது இருந்தது, இதற்காக ரோகித் சர்மாவுக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு எதிரான தோல்விக்கு பின் பேட்டியளித்த ரோகித் சர்மா, நடுத்தர வரிசை துடுப்பாட்டகாரர்கள் தான் தோல்விக்கு காரணம் என கூறினார்.