அவுட் கொடுத்த விரக்தியில் நடுவரை திட்டிய ரோகித்சர்மா! கமெராவில் பதிவான வீடியோ காட்சி
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், அவுட் இல்லாததற்கு நடுவர் அவுட் கொடுத்ததால், கடும் விரக்தியடைந்த ரோகித்சர்மா நடுவரை திட்டிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் வெறும் 131 ஓட்டங்கள் எடுக்க, அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 17.4 ஓவரில் இந்த இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் பஞ்சாப் அணி தன்னுடைய முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது. இந்நிலையில், இப்போட்டியின் முதல் ஓவரில் மொய்செஸ் ஹென்றிக்ஸ் வீசிய பந்தை எதிர் கொண்ட ரோகித் சர்மா, பின் பக்கம் அடித்து ஆட முற்பட்டார்.
— Cricket Unlimi (@CricketUnlimi) April 23, 2021
ஆனால், பந்தானது விக்கெட் கீப்பரிடம் செல்ல, அவர் அவுட் கேட்டார். உடனே நடுவரும் பந்து பேட்டில் பட்டது போல் எண்ணி அவுட் கொடுத்தார்.
இதைக் கண்ட ரோகித் பந்து பேட்டில் படவில்லை என்றும் மூன்றாவது அவருக்கு செல்லும்படி ரிவ்யூ எடுத்தார். மேலும் ரிவ்யூ எடுத்தது மட்டுமின்றி ஒரு நொடி கூட யோசிக்காமல் களத்தில் இருந்த நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை நோக்கி சில ஆவேசமான வார்த்தைகளை கூறி கத்தினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.