கோலியின் இந்த முடிவு அதிர்ச்சியாக உள்ளது! ரோகித் சர்மா வெளிப்படை
கோலி இந்திய அணிக்கான டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய அணிக்கான டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கோலியின் இந்த முடிவுக்கு பிசிசிஐ கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரையும் கோலி தலைமை இழந்ததால், கோலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்திய அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா கோலியின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும், அவர் ஒரு வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டதாக கூறியுள்ளார்.