கொல்கத்தா இந்த டெக்னிக்க யூஸ் பண்ணிட்டாங்க! மும்பையின் தோல்விக்கு இது தான் காரணம்! ரோகித் வெளிப்படை
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் தோல்வி குறித்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயான்மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
முதலில் ஆடிய மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் அடிக்க, அதன் பின் ஆடிய கொல்கத்தா அணி 15.1 ஓவரிலே 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், நடைபெற்று முடிந்த 2 போட்டிகளிலுமே நாங்கள் சொதப்பிவிட்டோம் என்று தான் கூறுவேன்.
நாங்கள் இன்றைய போட்டியில் பவுலிங் நன்றாக வீசியிருந்தாலும், கொல்கத்தா அணி வீரர்களான ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி அதை வேறு மாதிரி கொண்டு சென்றுவிட்டனர்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இது அந்தணியின் பயிற்சியாளராக உள்ள மெக்கல்லமின் வழி என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி ஜெயசூர்யா, ரணதூங்க தலைமையிலான இலங்கை வழி விரட்டல், நாம் இதை ஒன்றும் செய்ய முடியாது.
குறிப்பாக இப்போட்டியில் சிப இடங்களில் தவறாகிவிட்டன. நன்றாக துவங்கினோ, ஆனால் கடைசி ஓவர்களில் அடிக்க முடிக்கவில்லை. இது ஒரு நல்ல மைதானம், நல்ல தொடக்கத்தை மூலதனமாகத் தவறவிட்டோம்.
மேலும் தொடக்கத்தில் சரியாக பந்து வீசவில்லை. நான் இந்தத் தோல்வி குறித்து அதிகமாக எதையும் பார்க்க விரும்பவில்லை, இப்படியெல்லாம் நடக்கும் நாம் இதை விடுத்து நகர்ந்து அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.
நல்ல தொடக்கத்துக்குப் பிறகு கூட்டணிகள் அமைக்க வேண்டும். ஆனால் ரெகுலர் இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தோம்.
புதிதாக இறங்கும் பேட்டர்களுக்கு இறங்கியவுடனேயே ஷாட்களை ஆடுவது கடினம். கடைசி போட்டியிலும் இதுதான் நடந்தது எனவே இதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. புள்ளிகள் அட்டவணையில் எங்கு இருக்கிறோம் என்பது எப்போதும் சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.