தமிழக வீரர் அஸ்வினை புகழ்ந்து பேசிய ரோகித் சர்மா
தமிழக வீரர் அஸ்வின் குறித்து கோலி சொல்லாததை புதிய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
கோலி அஸ்வினை மனதாரா புகழ்ந்து பேசிராத நிலையில், டி20 போட்டியின் நடு ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி அசத்துகிறார் அஸ்வின் என, புதிய டி20 கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்த தொடரில் அஸ்வினின் பங்கு சிறப்பாகவே இருந்தது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரை கைப்பற்றியதில் மகிழ்ச்சி. மிடில்-ஓவரில்' சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் நம்பிக்கை அளித்தார்.
இவரை போன்ற திறமையான பவுலர்கள் அணியில் இருக்கும்பட்சத்தில், 'மிடில்-ஓவரில்' எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுவார்.
நான்கு ஆண்டுகளுக்கு பின், 'டி-20' போட்டிக்கு திரும்பிய இவரிடம் திறமை குறையவில்லை என கூறியுள்ளார்.