ஜேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்
- ஜேர்மனியில் பவேரியா மாகாணத்தில் Gunzburg பகுதியில் உள்ள Legoland Park-ல் இந்த விபத்து நடந்துள்ளது.
- 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவசர உதவிக்கு 3 ஹெலிகாப்டர்கள் சம்பா இடத்துக்கு அனுப்பப்பட்டன.
ஜேர்மனியில் லெகோலாண்ட் பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 34 பேர் காயமடைந்தனர்.
தெற்கு ஜேர்மனியில் பவேரியா மாகாணத்தில் உள்ள குன்ஸ்பர்க்கில் உள்ள லெகோலாண்ட் பூங்காவில் வியாழக்கிழமை இரண்டு ரோலர் கோஸ்டர் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 34 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
ஜேர்மன் செய்தி நிறுவனமான dpa-ன் கூற்றுப்படி, ஒரு ரோலர் கோஸ்டர் ரயில் மிகவும் பிரேக் போட்டதாகவும் இதனால் மற்றொரு ரயில் அதன் மீது மோதியது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, மேலும் மீட்பு நடவடிக்கைக்கு உதவ மூன்று ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் ரோலர்கோஸ்டர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் சமீப நாட்களில் இது இரண்டாவது சம்பவம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம், தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள க்ளோட்டனில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் 57 வயது பெண் ஒருவர் நகரும் ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து காயங்களால் இறந்தார்.