Coca Cola போன்ற குளிர்பானங்களுக்கு நோ! பெற்ற மகனுடன் சண்டையிட்ட ரொனால்டோ
குளிர்பானம் அருந்துவது மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவதற்காக மகனுடன் தான் சண்டையிட்டதாக போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
கால்பந்து ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடும் யூரோ 2020 கால்பந்து தொடர் சமீபத்தில் தொடங்கியது.
சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் போர்ச்சுகல் நாயகன் கால்பந்து ஜாம்பவாம் ரொனால்டோ, தனது மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த கோக்க கோலா போத்தல்களை அகற்றியது உலக அளிவில் வைரலானது.
இதனால் ஒரு நாளில் கோக்க கோலா வியாபரம் கடுமையாக சரிந்தது என செய்திகள் வெளியானது.
இச்சம்பவத்தை அடுத்து, முன்பு குளிர்பானம் அருந்துவது மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவதற்காக மகனுடன் தான் சண்டையிட்டதாக ரொனால்டோ கூறும் பழைய வீடியோ இணையத்தில் வைரலானது.
குளிர்பானம் குடிப்பது மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கவழக்கங்களை எதிர்த்து தனது மகனுடன் சண்டையிட்டதாக அந்த வீடியோவில் ரொனால்டோ வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவது எனக்கு பிடிக்காது என மகனுக்கு தெரியும் என ரொனால்டோ கூறியுள்ளார்.