மீண்டும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
சாதனைப் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
F பிரிவில் பிரான்ஸ் அணிக்கு எதிராக இரண்டு கோல் அடித்த நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்துள்ள ஈரானின் கால்பந்து ஜாம்பவான் Ali Daei என்பவரின் சாதனையை சமன் செய்தார்.
1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய Ali Daei, 149 போட்டிகளில் இருந்து 109 கோல்களை தமது பெயரில் பதிவு செய்திருந்தார்.
ஆனால் ரொனால்டோ தமது 179ம் போட்டியில் தான் Ali Daei பதிவு செய்திருந்த சாதனையை சமன் செய்துள்ளார். ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் யூரோ கிண்ணம் போட்டிகளில் அதிக கோல் அடித்திருந்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ முறியடித்திருந்தார்.
இதுவரை விளையாடிய 24 யூரோ கிண்ணம் போட்டிகளில் 14 கோல்கள் பதிவு செய்துள்ளார் ரொனால்டோ.
மட்டுமின்றி தொடர்ந்து 5 யூரோ கிண்ணம் கால்பந்து தொடரில் கோல் அடித்துள்ள முதல் வீரர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.