மேகன் பிரித்தானியாவுக்கு திரும்பினால் நிச்சயம் இதுதான் நடக்கும்: அரண்மனை ஊழியர்கள் அச்சம்
மேகன் பிரித்தானியாவுக்கு திரும்பினால், நிச்சயம் அவர் பிரித்தானியர்களால் அவமதிக்கப்படுவார் என தாங்கள் அஞ்சுவதாக தெரிவிக்கிறார்கள் அரண்மனை ஊழியர்கள்.
இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை மாதம் 1ஆம் திகதி, கென்சிங்டன் மாளிகையில் அவரது உருவச்சிலையை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அப்போது, சத்தர்ப்பவசத்தாலாவது வில்லியமும் ஹரியும் நல்லபடியாக பேசிக்கொள்ளும் ஒரு நிலைமை உருவாகும் என அரண்மனை ஊழியர்கள் சிலர் நம்புகிறார்கள் என்கிறார் ராஜ குடும்ப விமர்சகரான Dan Wootton.
அதே நேரத்தில், அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள நிறைமாத கர்ப்பிணியான ஹரியின் மனைவி மேகன் வருவாரா என்று தெரியவில்லை.
ஆனால், அவர் வந்தால், அவரை அவமதிக்கும் வகையில் பொதுமக்கள் நிச்சயம் வெளிப்படையாக ஊளையிடுவார்கள் என அரண்மனை ஊழியர்கள் அஞ்சுவதாக தெரிவிக்கிறார் Wootton.
ஓபரா வின்ஃப்ரேயுடனான பேட்டிக்குப் பிறகு மக்களிடையே மேகனுக்கு இருந்த நல்ல பெயரை அவர் இழந்துவிட்ட நிலையில், நிச்சயம் அவர் பிரித்தானியாவுக்குத் திரும்பிவந்தால் பிரித்தானியர்கள் அவரை அவமதிப்பார்கள் என்கிறார் Wootton.