"இளவரசர் ஹரி மகன் ஆர்ச்சியுடன் பிரித்தானியாவுக்கு வருவார்" ராயல் நிபுணர் நெகிழ்ச்சி தகவல்
இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவுக்கு இளவரசர் ஹரி தனது மகன் ஆர்ச்சியை அழைத்து வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் வரும் ஜூலை 1-ஆம் திகதி இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளை குறிக்கும் விதமாக கென்சிங்டன் அரண்மனையில் அவரது உருவச்சிலை திறக்கப்படவுள்ளது.
தனது மறைந்த தாயின் சிலைதிறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இளவரசர் ஹரி, ஓப்ரா வின்ஃபிரே உடனான பரபரப்பான நேர்காணலுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக பிரித்தானியாவுக்கு திரும்பவுள்ளார்.
கடைசியா இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்கு ஹரி தனியாக வந்திருந்தார். ஆனால் இந்த முறை அவர் தனது மகன் ஆர்ச்சியை தன்னுடன் அழைத்து வருவார் என்று ராயல் நிபுணர் கணித்துள்ளார்.
ராயல் குடும்பத்துடனான சமாதான முன்னெடுப்புகளைத் தொடங்க இளவரசர் ஹரி ஆர்ச்சியை வீட்டிற்கு அழைத்து வருவார் என்று Prince Harry: The Inside Story-ன் ஆசிரியரான ராயல் நிபுணர் டங்கன் லார்கோம்ப் (Duncan Larcomb) கூறுகிறார்.
மேகன் மற்றும் ஹரி கூறிய சில கூற்றுக்களைத் தொடர்ந்து அரச குடும்பத்தில் பதற்றம் அதிகமாக இருக்கும் நிலையில், ஆர்ச்சி பிளவுகளை குணப்படுத்த ஒரு "சமாதான முன்னெடுப்பின்" ஒரு பகுதியாக மாறக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
"நம்பகமான அரச மூலங்களிலிருந்து நான் கேள்விப்பட்டதிலிருந்து, ஹரி தனது தாயின் சிலை திறப்புக்காகத் திரும்புவார். அவர் ஃப்ராக்மோர் (மேகனுடன் வசித்த முன்னாள் வீடு) தங்குவார்.
ஆனால் அவர் தனியாக இருக்க மாட்டார். ஆர்ச்சி அவருடன் இருப்பார் என்று நம்புவதற்கு வலுவான காரணம் இருக்கிறது. ஆர்ச்சி வருவது தற்போதையை நிலைமைக்கு ஒரு பெரிய பிரச்சினையை தணிக்கும் ஆயுதமாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவரைக் கொண்டுவருவதற்கான முடிவு ஹரியின் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான முதல் அறிகுறியாக இருக்கலாம்.
அவரும் மேகனும் செய்ததே சரியானது என்று ஹரி இன்னும் நம்புகிறார் என்று நான் நினைக்கிறேன் - ஆனால் ஆர்ச்சியை மீண்டும் கொண்டுவருவது ஒருவிதமான சமாதான சைகையாக இருக்கும், இது சமீபத்தில் நடந்ததைப் பற்றி ஒரு உண்மையை வெளிப்படுத்த பார்க்கிறார் என்பதற்கான ஒரு உறுதியான அறிகுறியாகும். இது நிறைய காயங்களை குணப்படுத்த உதவும்" என்கிறார்.
தகவல்களின்படி, அண்மையில் மகள் லிலிபெட்டை பெற்றெடுத்த மேகன், அமெரிக்காவில் தங்கியிருப்பார் என்றும், அதே நேரத்தில் ஹரி ஆர்ச்சியுடன் லண்டனுக்கு பயணம் மேற்கொள்வார் என நம்பப்படுகிறது.