இளவரசர் ஹரியை மீண்டும் புறக்கணிக்கும் ராஜ குடும்பம்: முக்கிய நிகழ்வுக்கு அழைப்பில்லை
பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதும், தனது சுயசரிதைப் புத்தகத்தில் தன் குடும்பத்தினர் அனைவரையும் அவமதித்ததும் உண்மை. என்றாலும், மன்னர் சார்லசும் இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தன் குடும்பத்தினரை சந்திக்க ஹரி எவ்வளவு முயன்றும், ராஜ குடும்பத்தின் தரப்பில் அவருக்கு சரியான வரவேற்பில்லை.
அதுமட்டுமின்றி, பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க இளவரசர் ஹரிக்கு அழைப்புகூட விடுக்காமல் அவரை ராஜ குடும்பம் புறக்கணித்துவருகிறது.
Image: Getty Images
மீண்டும் ஒரு புறக்கணிப்பு
இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி, பிரித்தானிய மன்னருடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு அந்த விழாவில் கலந்துகொள்ள இளவரசர் ஹரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
Image: Getty Images
இந்த ஆண்டும், அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹரிக்கு அழைப்பு இதுவரை விடுக்கப்படவில்லை. ஆகவே, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தன் தந்தையின் பிறந்தநாள் விழாவில் ஹரி புறக்கணிக்கப்படுவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மன்னரின் பிறந்தநாள் விழா
உண்மையில், மன்னர் சார்லசின் பிறந்த திகதி, நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆகும். ஆனால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஆட்சி செய்யும் எந்த மன்னரானாலும், மகாராணியானாலும், ஜூன் மாதத்தில் ஒரு பிறந்தநாள் விழா கொண்டாடுவது மரபாகிவிட்டது.
Trooping the Colour என்னும் பெயரில், லண்டனில், மன்னருடைய குதிரை வீரர்கள் அணிவகுப்பு நடத்தி அந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடுவது மரபு. ஆகவே, இம்மாதம் 15ஆம் திகதி, மன்னருடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதில் கலந்துகொள்ளத்தான் ஹரிக்கு அழைப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |