இளவரசர் சார்லஸ் மன்னரானதால் மிகப்பெரிய நிலச்சுவான்தாராகியுள்ள அவருடைய மகன்
சார்லஸ் வசம் இருந்த அனைத்து நிலங்களும் இளவரசர் வில்லியமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவிலேயே அதிக நிலங்களுக்குச் சொந்தக்காரர் என்னும் பெருமையும் இளவரசர் வில்லியமுக்குக் கிடைத்துள்ளது.
இளவரசர் சார்லஸ் மன்னராகியுள்ளதால், இதுவரை அவர் வகித்து வந்த வேல்ஸ் நாட்டு இளவரசர் என்ற பட்டம் அவரது மூத்த மகனான வில்லியமை வந்தடைந்துள்ளது.
அத்துடன், சார்லஸ் வசம் இருந்த அனைத்து நிலங்களும் வில்லியமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய நிலச்சுவான்தாராகியுள்ளார் அவர்.
மன்னர் சார்லசுக்கு அவரது தாயாகிய மகாராணியார் மற்றும் பாட்டியாரிடமிருந்து பூர்வ சொத்துக்களாக ஏராளமான சொத்துக்கள், குறிப்பாக நிலங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் கிரௌன் எஸ்டேட், பால்மோரல், சாண்ட்ரிங்காம், பக்கிங்காம் அரண்மனை, விண்ட்சர் மாளிகை, டம்ஃப்ரைஸ் இல்லம், மே அரண்மனை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
Image: Pool/Max Mumby/Getty Images
ஆனாலும், அவற்றிலெல்லாம் மன்னர் சார்லசுக்கு மிகவும் பிடித்தது ஹைக்ரூவ் இல்லமாகும். அதுதான் சார்லஸ் கமீலாவின் குடும்ப வீடு.
இப்போது அந்த வீடு பாரம்பரியப்படி இளவரசர் வில்லியம் கைக்கு வந்துள்ளது.
ஆக, பிரித்தானியாவிலேயே அதிக நிலங்களுக்குச் சொந்தக்காரர் என்னும் பெருமையும் இளவரசர் வில்லியமுக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Image