முடிவுக்கு வந்த ராணியாருக்கான துக்கமனுசரிப்பு: ராஜகுடும்ப சமூக ஊடக பக்கங்களில் புதிய மாற்றம்
ராணியர் காலமானதால் ராஜகுடும்பத்து உத்தியோகப்பூர்வ சின்னங்களை சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றியிருந்தனர்.
ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.
பிரித்தானிய ராஜகுடும்பத்து சமூக ஊடக பக்கங்களில் ராணியாருக்கான துக்கமனுசரிப்பு நாள் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், ராணியாருக்கு பின்னர் புதிய திருத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.
ராணியர் காலமான நிலையில் ராஜகுடும்பத்து உத்தியோகப்பூர்வ சின்னங்களை சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றியிருந்தனர். ராஜகுடும்பம் மட்டுமின்றி, இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியும் உத்தியோகப்பூர்வ சின்னங்களையே சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தனர்.
தற்போது ராணியார் புகைப்படத்திற்கு பதிலாக மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும், வேல்ஸ் இளவரசர் பக்கத்தில் தற்போது இளவரசர் வில்லியம் மற்றும் கேட் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8ம் திகதி ராணியார் காலமான நிலையில், தேசமும் ராஜகுடும்பமும் துக்கமனுசரித்ததுடன், செப்டம்பர் 19ம் திகதி ராணியா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது பிரித்தானியா சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாலும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.
@AP
இந்த நிலையில் ராஜகுடும்பத்து உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துக்க நாட்கள் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, ராணியாரின் மிகப் பழமையான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.