மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வையே மறக்கச் செய்த இனிமையான நிகழ்வு
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட அசௌகரியமான நிகழ்வையே மறக்கச் செய்யும் ஒரு விடயம் நிகழ்ந்துள்ளது.
மன்னரையும் ராணியையும் திடுக்கிடவைத்த விடயம்
மன்னரும் ராணியும் இங்கிலாந்திலுள்ள யார்க் என்ற இடத்துக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு இளைஞர் மன்னர் சார்லஸ் மீது முட்டை ஒன்றை வீச, அந்த இடத்தில் அசௌகரியமான ஒரு சூழல் உருவானது.
ஆச்சரியம் என்னவென்றால், கையெழுத்துப்போடுவதற்காக வைத்திருந்த பேனா சரியில்லை என்பதற்காகவே அப்படிக் கோபப்பட்ட மன்னர் சார்லஸ், தன்னை நோக்கி முட்டை வீசப்பட்டப்போதுகூட, பரவாயில்லை, நாம் நம்முடைய வேலையைத் தொடர்வோம் என்று தொடர்ந்து மக்களுடன் அளவளாவப் புறப்பட்டதுதான்!
Image: 2022 Getty Images
ராஜ மரபை மீறி மன்னரும் ராணியும் செய்த செயல்
இந்நிலையில், ஒரு அசௌகரியமான சம்பவம் நடந்த பின்னர், மறக்க முடியாத, ஒரு இனிமையும் நெகிழ்ச்சியுமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஆம், மன்னரையும் ராணியையும் பார்ப்பதற்காக, கண் பார்வையில் தீவிரமான பிரச்சினைகள் கொண்ட ஐந்து வயது சிறுவன் ஒருவன் வந்திருக்கிறான்.
அவனுடைய பெயர் ஜேசன் (ason Tweedie-Long). மன்னரைப் பார்க்கவந்தாலும், கூட்டத்தில் தொலைவில் நின்ற ஜேசனால் மன்னரையும் ராணியையும் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. இந்த தகவல் மன்னர், ராணி தம்பதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
We were very happy to have helped young resident Jason, who is visually impaired, to meet the King and Queen Consort during todays royal visit. Jason said it he felt ‘calm, happy and excited’ and got to hold their hands. 👑 pic.twitter.com/OgQzCVKs7i
— City of York Council (@CityofYork) November 9, 2022
உடனடியாக, மரபுகளை மீறி, தடுப்பைத் தாண்டி ஜேசனைத் தங்களிடம் வரவழைத்துள்ளார் மன்னர். மன்னரின் கையை ஒரு பக்கமும், ராணியின் கையை மறுபக்கமும் பிடித்துக்கொண்டு ஜேசன் வாய் நிறைய புன்னகையுடன் நிற்கும் புகைப்படங்கள் யார்க் நகர ட்விட்டர் கணக்கில் வெளியாகியுள்ளன.
அந்தப் படத்தைப் பார்த்தவர்கள், மன்னர் மீது முட்டை வீசப்பட்ட நிலையிலும், மரபை மீறி அவர் அந்தச் சிறுவனை சந்தோஷப்படுத்தியதை சொல்லிச் சொல்லி அவரைப் புகழ்கிறார்கள்.
மற்றவர்களோ, அந்த சிறுவனும் அவனது குடும்பத்தினரும் தன் வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவத்தை மறக்கமாட்டார்கள் என்று கூறி மகிழவும் நெகிழவும் செய்கிறார்கள்.