துக்க நாட்களில் பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் ஏன் முத்துமாலைகள் அணிகிறார்கள்? விரிவான பின்னணி
துயரத்தில் இருந்து மீள முடியாமல் 40 ஆண்டுகாலம் விக்டோரியா ராணியார் கருப்பு உடை அணிந்து காணப்பட்டுள்ளார்.
டயானா இளவரசியின் இறுதிச்சடங்கின் போதும் ராணியார் முத்து நகைகளை அணிந்திருந்தார்.
பிரித்தானிய ராணியாருக்காக துக்கமனுசரிக்கும் ராஜகுடும்பத்தினர் பெரும்பாலானோர் கருப்பு உடையுடன் முத்து நகைகளை அணிந்துள்ளது பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் ராணியாருக்கு மரியாதை செலுத்தவந்த பெரும்பாலான ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் முத்து நகைகளையே அணிந்து காணப்பட்டனர்.
@AP
பொதுவாக, ராஜகுடும்பம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளில் கேட் மிடில்டன், மேகன் மெர்க்கல் போன்றவர்கள் ராணியார் இரண்டாம் எலிசபெத் கைவசமிருக்கும் நகைகளையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ராணியாருக்கும் மிகவும் பிடித்தமான நகைகளில் முத்து நகைகள் கருதப்படுகிறது. துக்கமனுசரிக்கும் காலகட்டத்தில் முத்து நகைகளை பிரித்தானிய ராஜகுடும்பம் அணிவதற்கு காரணம் விக்டோரியா மகாராணியார் என கூறப்படுகிறது.
@REX
1861ல் தமது கணவர் இளவரசர் ஆல்பர்ட் காலமானதன் பின்னர், அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் சுமார் 40 ஆண்டுகாலம் விக்டோரியா ராணியார் கருப்பு உடை அணிந்து காணப்பட்டுள்ளார்.
அத்துடன் முத்து நகைகளை அவர் விரும்பி அணியத்துவங்கியுள்ளார். மட்டுமின்றி, அவர் காலமாகும் வரையில் முத்து நகைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். அதுவே ராஜகுடும்பத்தினர் தற்போது மரபாக முன்னெடுத்து வருகின்றனர்.
Credits: Ben Stansall
டயானா இளவரசியின் இறுதிச்சடங்கின் போதும் ராணியார் முத்து நகைகளை அணிந்திருந்தார். மட்டுமின்றி, தமது தந்தை ஆறாம் ஜோர்ஜ் மன்னர் காலமான போதும், தமது ஒரே சகோதரி இளவரசி மார்கரெட் மற்றும் கணவர் பிலிப் இறுதிச்சடங்கின் போதும் ராணியார் எலிசபெத் முத்து நகைகளையே அணிந்து கொண்டார்.
இந்த நிலையில், தற்போது ராணியாரின் இறுதிச்சடங்கு மற்றும் துக்கமனுசரிக்கும் வேளைகளிலும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் கேட் மிடில்டன் மற்றும் மேகன் மெர்க்கல் உட்பட அனைவரும் முத்து நகைகளை அணிந்து காணப்படுகின்றனர்.
Credits: Bettmann Archive