மன்னர் சார்லசின் மனைவியை அலட்சியம் செய்த ராஜகுடும்ப பெண்கள்: இன்று அவர் எட்டியுள்ள உயரம்
என்னை முட்டாள் போல நடத்தாதே என கமீலாவை நேருக்கு நேர் மடக்கி கேள்வி கேட்டிருக்கிறார் இளவரசி டயானா.
இளவரசர் ஹரியின் மனைவி மேகன், கமீலாவை அலட்சியம் செய்துள்ளார்.
மன்னர் சார்லசின் மனைவியாகவும், ராணியாகவும் இருக்கும் கமீலா, இப்படி ஒரு மேன்மையை எட்டுவார் என்று தெரிந்திருந்தால், அவரை இந்த அளவுக்கு யாரும் அலட்சியம் செய்திருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
அப்போது இளவரசராக இருந்த சார்லஸ், தன் தாய் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் முதன்முதலில் கமீலாவைக் குறித்து பேச வந்தபோது, அந்த மோசமான பெண்ணைக் குறித்து என்னிடம் பேசாதே என சத்தம் போட்டாராம் மகாராணியார்.
Image: Getty Images
அதேபோல, எங்கள் திருமணத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள் என உலகமே பார்க்க, கமீலாவுக்கும் இளவரசர் சார்லசுக்கும் இடையிலான தவறான உறவைக் குறித்து இளவரசி டயானா தொலைக்காட்சியில் பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்கமுடியாது, கமீலா உட்பட.
அத்துடன், உனக்கும் என் கணவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும், என்னை முட்டாள் போல நடத்தாதே என, கமீலாவை நேருக்கு நேர் மடக்கி கேள்வி கேட்டிருக்கிறார் இளவரசி டயானா.
காலங்கள் கடந்து இளவரசர் சார்லசை முறைப்படி திருமணம் செய்து, மகாராணியார் மனதில் இடம்பிடித்த பிறகும், கமீலாவை அலட்சியம் செய்திருக்கிறார் ஒரு பெண். அது இளவரசர் ஹரியின் மனைவியான மேகன்!
இது குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ள ராஜகுடும்ப எழுத்தாளரான Angela Levin, மேகன் பிரித்தானியாவுக்கு முதல் முறை வந்தபோது, கமீலா மேகனை அன்புடன் வரவேற்றார் என்கிறார்.
Photo: AP
புதிதாக ராஜகுடும்பத்துக்குள் வரும் ஒரு பெண்ணின் கஷ்டங்கள் என்னென்ன என்பதை நன்கறிந்த கமீலா, தன்னைப்போலவே புதிதாக வந்த மேகனுடன் அவ்வப்போது உணவருந்துவதுடன், ராஜகுடும்ப அழுத்தங்களை சமாளிப்பது எப்படி என மேகனுக்கு ஆலோசனை கூறுவாராம்.
ஆனால், மேகனுக்கோ, கமீலாவின் ஆலோசனைகள் சலிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே, அவரை அலட்சியம் செய்த மேகன், தான் தன் வழியே போகத்துவங்கியிருக்கிறார்.
ஆனால், அந்த கமீலா, மன்னரின் மனைவி, பிரித்தானிய மக்களின் ராணி ஆவார் என இந்த மேகனோ, அந்த டயானாவோ நினைத்துப் பார்க்கவில்லை போலும்.
ஆனால், அன்று ராஜகுடும்பப் பெண்களால் புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட கமீலாவோ, இன்று மன்னரின் மனைவியாகியிருக்கிறார்.
கமீலாவை மக்கள் ராணி என ஏற்றுக்கொள்ளவேண்டும் என மறைந்த மகாராணியார் கேட்டுக்கொள்ள, மக்களில் ஒரு கூட்டத்தாரும் அவரை இப்போது ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளார்கள்.
ஆனால், டயானாவும் சரி, மேகனும் சரி, ராஜகுடும்பத்தில் வாழ தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை அலட்சியப்படுத்திவிட்டார்கள், அதன் பலனை அனுபவித்தும்விட்டார்கள்!
Credit: Getty
Credit: Getty Images - Getty
image - AP