வில்லியமை பாதுகாக்க பொய்களை அள்ளி வீசும் அரச குடும்பம்! இளவரசர் ஹரி குற்றச்சாட்டு
தனது சகோதரன் வில்லியமிற்காக பொய்களை கூறும் பக்கிங்ஹாம் அரண்மனை, தன்னை கைவிட்டதாக இளவரசர் ஹரி குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் பற்றிய ஆவணப்படங்களின் சமீபத்திய அத்தியாயங்களின் ட்ரெய்லர் திங்களன்று வெளியிடப்பட்டது.
அதில், இளவரசர் ஹரி பக்கிங்ஹாம் அரண்மனை அவரது சகோதரர் வில்லியமுக்காக "பொய் சொல்வதில் மகிழ்ச்சி" அடைகிறது என்ற குற்றம்சாட்டினார்.
ட்ரெய்லரின் ஒரு பகுதியில், ஹரி (38), பக்கிங்ஹாம் அரண்மனை மீது குற்றம் சாட்டினார் மேலும் "அவர்கள் என் சகோதரனைப் பாதுகாக்க பொய் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள், ஆனால் எங்களைப் பாதுகாக்க உண்மையைச் சொல்ல ஒருபோதும் தயாராக இல்லை" என்றார்.
GettyImages
நெட்ஃபிலிக்ஸ் அவனத்தொடரான "ஹரி & மேகன்"ன் முதல் மூன்று அத்தியாயங்கள் கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்டன, அகில் அவரையும் அவரது தாயார் டயானாவையும் அதிகப்படியான சிக்கல்களிலிருந்து பாதுகாக்கத் தவறியதற்காக அரச குடும்பத்தை விமர்சித்துள்ளனர்.
பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஊடகங்கள் மற்றும் அரண்மனை பத்திரிகை நடவடிக்கைக்கு எதிராக இருந்தன.
2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஹரி தனது மூத்த சகோதரனுடனான பிளவை உறுதிப்படுத்தினார். சகோதரர்கள் இருவரும் கடந்த ஆண்டு அவர்களின் தாயின் சிலை திறப்பு விழா மற்றும் அவர்களின் பாட்டி ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச் சடங்கில் கூட பேசவில்லை.