ஓடும் ரயிலில் இருந்து விழுந்த கர்ப்பிணி பெண்.. தக்க சமயத்தில் உயிரை காப்பற்றிய ஹீரோ! வெளியான சிசிடிவி காட்சி
இந்தியாவின் மும்பை நகரில் ஓடும் ரயிலிருந்து இறங்கி கீழே விழுந்த கர்ப்பிணி பெண்ணை தக்க சமயத்தில் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நேற்று அக்டோபர் 18ம் திகதி மும்பைியல் உள்ள் கல்யான் ரயில் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், ரயில் ஒன்று நடைமேடையில் புறப்பட காவலர் S.R.Khandekar கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
அப்போது, அவரை கடந்த சென்ற ஒரு பெட்டியலிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் இறங்க முயன்று தடுமாறி கீழே விழுகிறார்.
#LifeSavingAct On dated 18/10/21 an alert RPF staff Shri. S R Khandekar saved a pregnant lady while de-boarding from running train at #KalyanStation
— DRM MUMBAI CR (@drmmumbaicr) October 19, 2021
Railway appeals to passengers not to board or de-board a running train. @Central_Railway pic.twitter.com/9PkfkSsmZN
இதைக்கண்ட உடனே ஓடிச்சென்ற காவலர், அப்பெண் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் உள்ள இடைவெளிக்குள் விழுந்து விடாமல் பத்திரமாக பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.
தக்க சமயத்தில் கர்ப்பிணி பெண்ணின் உயரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் S.R.Khandekar-ஐ அனைவரும் பாராட்டி வருகின்றனர்.