திருப்பதியில் ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும்: தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி கோயிலில் ஒரு நாள் அன்னதானம் வழங்க விரும்புவோர் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ரூ.44 லட்சம் நன்கொடை
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
இவர்களுக்காக திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அன்னதானம் வழங்கும் திட்டமானது ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத திட்டம் என்னும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அன்னதானமானது பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து வழங்கப்படுகிறது.
மாத்ரு ஸ்ரீ வெங்கமாம்பாள் கூடம் தவிர திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜர் கோயில், விஷ்ணு நிவாசம், மாதவம் விடுதிகள் என பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பதி கோயிலில் ஒரு நாள் அன்னதானம் வழங்க விரும்புவோர் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், காலை சிற்றுண்டிக்கு மட்டும் ரூ.10 லட்சம், மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு ரூ.17 லட்சம் எனவும் நன்கொடை வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |