ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த தமிழக வீரர் அஸ்வின்! அக்கறையுடன் இலங்கை வீரர் வெளியிட்ட பதிவு
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் கூறிய நிலையில் அவரை அக்கறையுடன் விசாரித்துள்ளார் இலங்கை ஜாம்பவான் அர்னால்ட்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் தனது விலகல் முடிவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அஸ்வினுக்கு டுவிட்டரில் டேக் செய்த ருசல் அர்னால்ட், பாதுகாப்பாக இருங்கள் அஸ்வின், அனைவருக்கும் நல்ல அதிர்வுகள் ஏற்படட்டும் என பதிவிட்டுள்ளார்.
Stay safe Ash .. Good vibes to all 🙏🏽
— Russel Arnold (@RusselArnold69) April 26, 2021