உளவு குற்றச்சாட்டு தொடர்பில் ரஷ்ய அதிகாரியை வெளியேற்றும் பிரித்தானியா!
ரஷ்ய தூதரக அதிகாரியை உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரித்தானியா வெளியேற்றுகிறது.
ரஷ்யாவின் பாதுகாப்பு தூதரக அதிகாரி
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல், ரஷ்ய நலன்களுக்கு சேவை செய்ய முக்கிய தகவல்களை கசியவிடுவது உட்பட, அதன் முகவர்கள் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் மற்றும் உளவு பார்த்தல் போன்றவற்றை குற்றம்சாட்டி, பிரித்தானியா பல ஆண்டுகளாக ரஷ்யாவுடன் ஒரு அமைதியற்ற உறவையே கொண்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு தூதரக அதிகாரி Maxim Elovikஐ பிரித்தானிய அரசு ஒரு அறிவிக்கப்படாத இராணுவ உளவுத்துறை அதிகாரி என்று குறிப்பிடுகிறது.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் மாஸ்கோவின் உளவுத்துறை சேகரிப்பு நடவடிக்கைகளை இலக்காகக் கொண்ட பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரை வெளியேற்றுவதாக கூறியுள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் ஆபத்தான நடவடிக்கைகள்
உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளேவர்லி, உளவு பார்த்தல் ஐரோப்பா முழுவதும் ரஷ்ய அரசாங்கத்தின் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் என்று கூறினார்.
Maxim உளவுத்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதனால், ரஷ்யாவிற்கு சொந்தமான பல சொத்துக்களின் இராஜதந்திர அந்தஸ்தை இது ரத்து செய்யும்.
மேலும் ரஷ்ய தூதரக விசாக்கள் மற்றும் வருகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரஷ்யாவிற்கு எதிரான பிரித்தானிய கட்டுப்பாடுகள், ஆதாரமற்ற மற்றும் அபத்தமான சாக்குப்போக்கின் கீழ் விதிக்கப்பட்டதாக லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |