உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட தயாராக இருக்கும் ரஷ்ய உளவாளிகள் பிரித்தானியாவுக்குள்... லீக் ஆன தகவலால் பரபரப்பு
தங்கள் உயிரைக்கூட விடத் தயாராக இருக்கும் ரஷ்ய உளவாளிகளை பிரித்தானியாவில் களமிறக்க ரஷ்யா தயாராகிவருவதாக லீக் ஆன மின்னஞ்சல்கள் சிலவற்றில் இருந்து தெரியவந்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய இலக்கு பிரித்தானியா
உக்ரைன் போர் எதிர்பார்த்ததுபோல் எளிதாக இல்லாததால், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் பிரித்தானியா, ரஷ்யாவின் முக்கிய இலக்காகியுள்ளது என்கிறார் முன்னாள் பிரித்தானிய உளவுத்துறை அலுவலரான Annie Machon.
ஆகவே, பிரித்தானியாவிலிருந்து முக்கிய தகவல்களைப் பெறுவதற்காக உளவாளிகளை இறக்க ரஷ்யா தீவிரமாக முயற்சிக்கலாம் என்கிறார் அவர்.
பிரித்தானியாவில் வாழும், ரஷ்யா மீது பரிதாபம் கொண்டவர்கள் அல்லது ரஷ்யா பக்கம் ஆதரவு காட்டுபவர்களையும், முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்களையும் இழுத்து உளவாளிகளாக ஆக்கிக்கொள்ள ரஷ்யா முயற்சிக்கலாம் என்கிறார் Annie.
Credit: AP
ஆசை காட்டி கவரவும் திட்டம்
இப்படிப்பட்டவர்களை ஏதாவது ஒரு வழியில் இழுத்துக்கொள்ள ரஷ்யா முயற்சிக்கலாம். அதாவது, பெண்கள் மூலமாக மயக்கியோ, வெளிநாடு செல்பவர்களிடம் பெருந்தொகையைக் கண்ணில் காட்டி, எங்களுக்காக உளவு பார்த்தால் எக்கச்சக்கமாக பணம் தருவோம் என்று ஆசை காட்டியோ மக்களை உளவு பார்க்கத் தூண்டலாம் என்றும் கூறியுள்ளார் Annie.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பிலிருப்போரை அழகான பெண்களிடம் மயங்கவைத்து, பிறகு அவர்கள் பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் காட்சிகளைக் காட்டி மிரட்டியும் கூட காரியத்தை சாதிக்கச் செய்யலாம்.
Anna Chapman, Maria Butina முதலான பெண்கள் இப்படி தங்கள் அழகைக் காட்டி மயக்கி, ரஷ்யாவுக்காக உளவுபார்த்து ஏற்கனவே பிடிபட்டிருக்கிறார்கள்.
மேலும், ரஷ்யாவில் வாழும் ஒரு பிரித்தானியரை, அவருக்கு பிரச்சினை என்பதுபோன்ற ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி, பிறகு ஒருவர் அவருக்கு உதவுவது போல அவரை அணுகி, உனக்கு நாங்கள் உதவுகிறோம், பதிலுக்கு நீ எங்களுக்கு இதைச் செய்யவேண்டும் என அவரைக் கேட்டு உளவு பார்க்கவைப்பது, இப்படி பல்வேறு வகையில் மக்களை உளவு பார்ப்பதற்கு தயார் செய்ய ரஷ்யா முயற்சித்து வருவதாக தெரிவிக்கிறார் Annie.
இதற்கிடையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நான்கு ரஷ்ய உளவாளிகள் இருப்பதாக முன்னாள் ரஷ்ய உளவாளியான Boris Karpichkov என்பவர் கூறியுள்ளார்.
ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.