போருக்கு செல்ல விருப்பமில்லாத ரஷ்யர்கள் ஜேர்மனிக்கு வரலாம்: ஜேர்மன் அமைச்சர்கள் அறிவிப்பு
உக்ரைன் போருக்காக புடின் இராணுவத்தில் மேலும் ஆட்களைச் சேர்க்க முயன்று வருகிறார்.
கட்டாயத்தின் பேரில் ரஷ்யர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.
ரஷ்யாவில் ஒரு பக்கம் கட்டாயத்தின் பேரில் ரஷ்யர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. மறுபக்கம், போருக்குச் செல்ல விருப்பமில்லாத ரஷ்யர்கள் நாட்டை விட்டு தப்பியோட முயல்வதைக் குறித்த செய்திகளும் ஊடகங்களில் வெளியாகின்றன.
தங்கள் கணவர்களை இராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தக்கூடாது என்பதற்காக, மனைவிகள் அவர்களுடைய காலை உடைக்கக்கூட தயாராக இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.
இந்நிலையில், அப்படி போருக்குச் செல்ல விருப்பமில்லாமல் ரஷ்யாவிலிருந்து தப்பி வெளியேற விரும்புவோர், ஜேர்மனிக்கு வரலாம் என ஜேர்மன் அமைச்சர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் ஜேர்மன் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ரஷ்யாவில் போருக்கெதிராக போராடுவோருக்கு புகழாரம் சூட்டியுள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, இப்போது ஒவ்வொரு ரஷ்யரும் போருக்குள் இழுக்கப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது, ஆகவே, இனியும் உக்ரைனில் நடப்பதை பார்த்தும் பார்க்காதபடி ரஷ்யர்கள் யாரும் இருக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.